
போர்தோவின் திருக்குடும்ப கன்னியர் துறவற சபையினர் இளவாலை பிரதேசத்தில் பணிகளை ஆரம்பித்து அங்கு துறவற மடத்தை நிறுவியதன் 125வது ஆண்டு நிறைவு விழா 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. திருக்குடும்ப கன்னியர் மட சிற்றாலயத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞனப்பிரகாசம் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கலை நிகழ்வுகளும் அங்கு இடம்பொற்றன. இந்நாளை சிறப்பிக்குமுகமாக 125வது ஆண்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
Source: New feed
