
பாடசாலைகளில் கற்பிக்கும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கும், பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்குமான தவக்கால தியானம் 08.03.2020 சனிக்கிழமை, குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வு மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்பணி X.W ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றதுடன் கிளறேசியன் சபைச்சேர்ந்த அருட்திரு மில்பர் தவக்கால தியானத்தை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்திதுறை மறைக்கோட்டங்களிலிருந்து 250ற்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து பயனடைந்தார்கள்



Source: New feed
