
மடு அன்னையின் அன்பிலும், அரவனைப்பிலும் ,விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், தளராத மன உறுதியோடும் இத் திருவிழா திருப்பலியில் கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகை அவர்களுக்கும்,
இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், பதுளை மறைமாவட்டத்தின் ஆயருமான பேரருட்கலாநிதி வின்சன்.பெர்ணாண்டோ ஆண்டகை அவர்களையும், அனுராதபுர மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோபட் அன்ராடி ஆண்டகை அவர்களையும், குருநாகல் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி கரல்ட் அன்ரனி ஆண்டகை அவர்களையும் ,பல பாகங்களிலிருந்தும் அன்னையின் ஆசீரை பெறவந்துள்ள குருக்கள், அருட்சகோதர, சகோதரிகள் பக்தர்களாக இத் திருவிழாவிற்கு வருகை தந்த அனைத்து யாத்திரிகர்களுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர், குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள், பொது நிலைப்பணியாளர்கள், கத்தோலிக்க இறைமக்கள் சார்பாக நன்றிகளையும், திருவிழா நல் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.
விசேட விதமாக நாங்கள் பலருக்கு நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில் அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவிற்கு வருகை தந்த அனைவரையும் அன்போடும், பாசத்தோடும் வரவேற்று நிற்கின்றோம்.
அத்தோடு இந்த திருவிழா சிறப்பாக அமைய பெற அயராது பாடுபட்ட ஆயர், குருமுதல்வர், குருக்கள், அருட்சகோதர சகோதரிகள், குறிப்பாக மடு தேவாலய பரிபாலகர் வண பிதா பெப்பி.சோசை, மடு உதவி பங்குதந்த, அனைவருக்கும் நன்றிகள் பல கூறி நிற்கின்றோம்.
அத்தோடு ஆவணி திருவிழாவிற்கு வருகை தந்த யாத்திரிகர்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கிய அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை நிர்வாகத்தினர், சுகாதார பணியாளர்கள், போக்குவரத்து சாலை அதிகாதிகள், பணியாளர்கள், வைத்தியசாலை நிர்வாகத்தினர், வைத்தியர்கள், பணியாளர்கள் மற்றும் சாரதிகள், பொறியியளாளர்கள், அனைவருக்கும் மன்னார் மறைமாவட்டம் சார்பான நன்றிகள் உரித்தாகட்டும்.
அத்தோடு விசேட விதமாக கடந்த நவநாட்கள் தொடக்கம் திருவிழா வரைக்கும் யாத்திரிகர்களின் பாதுகாப்பில் கரிசனை கொண்டு மக்களை மிகவும் சிரமப்படுத்தாமல் இலகுவான முறையில் பதிவுகளை மேற்கொண்டு, சோதனைகளை மேற்கொண்டு திருவிழா திருப்பலி சிறப்பாக நடைபெற இரவு பகலாக ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்கிய இராணுவ, காவல்துறை (police) உயரதிகாரிகள், பணியாளர்கள், அனைவருக்கும் மன்னார் மறைமாவட்டம் சார்பான நன்றிகள் உரித்தாகட்டும்.
அத்தோடு நவநாள் மாலை வழிபாடுகள் சிறப்பாக அமைய ஒவ்வொரு நாளும் செபமாலை தியானங்களையும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருப்பொருளில் மறையுரைகளையும் ஆற்றிய (தமிழ், சிங்கள) அன்பான குருக்களுக்கு மன்னார் மறைமாவட்டம் சார்பான நன்றிகள் உரித்தாகட்டும்.
அத்தோடு நவநாட்கள் தொடக்கம் திருவிழா திருப்பலி வரை மிகவும் சிறப்பான முறையில் பயபக்தியோடு பாடல்களை வழங்கிய பாடகர் குழாமிற்கும், இதை நெறிப்படுத்திய குருக்களுக்கும் மன்னார் மறைமாவட்டம் சார்பான நன்றிகள் உரித்தாகட்டும்.
அத்தோடு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட சாரண பொறுப்பாசிரியர்கள், சாரணர்கள், திரிசாரணர்கள், முதலுதவி குழுவினர், அனைவருக்கும் மன்னார் மறைமாவட்டம் சார்பான நன்றிகள் உரித்தாகட்டும்.
அத்தோடு இத்திருவிழா சிறப்பாக அமைய ஒத்தாசை வழங்கிய மடு தேவாலயத்தின் பணியாளர்கள், உறுப்பினர்கள், மடு அன்னையின் தேரினை வடிவமைப்பதற்கு உதவிய அனைவருக்கும் மன்னார் மறைமாவட்டம் சார்பான நன்றிகள் உரித்தாகட்டும்.
Source: New feed
