
போர்டோவின் திருக்குடும்ப துறவற சபையினரின் யாழ். மாகாணத்தின் 17 வது பொதுச்சங்கம் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை இளவாலை திருக்குடும்ப கன்னியர் இல்லத்தில் நடைபெற்றது. மாகாணத்தலைவி ஆலோசகர்கள் உட்பட 33 சகோதரிகள் இதில் பங்குபற்றினார்கள். அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்திரு செல்வரட்ணம் அவர்கள் இப்பொதுச் சங்கத்தினை நெறிப்படுத்தினார்.



Source: New feed
