
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், மனிதர் மற்றும், இடங்களின் புனிதத்துவத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றவேளை, அப்போரை முடிவுக்குக்கொணரவும், அமைதியின் பாதைகளுக்கு வழியமைக்கவும், நம்மால் இயன்ற அனைத்தையும் ஆற்றுவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் யூத சமுதாயத்திடம் கூறியுள்ளார்.
நவம்பர் 22, இச்செவ்வாய் காலையில், உலக யூதமத நிறுவனத்தின் ஏறத்தாழ 200 பிரதிநிதிகளை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கேடு விளைவிப்பதற்கானவற்றை அல்ல, மாறாக அமைதிக்கான திட்டங்களைக் கொண்டிருக்கும் (எரே.29:11) இறைவன், அமைதிக்கான பயணத்தில் நம்மை ஒன்றிணைத்து அழைத்துச் செல்வாராக என்று கூறினார்.
இன்று உலகின் பல பகுதிகளில் அமைதி அச்சுறுத்தப்பட்டுள்ளது எனவும், எல்லாப் போர்களும், எப்போதும், எல்லா இடங்களிலும் மனித சமுதாயம் முழுவதற்கும் தோல்வியாகவே உள்ளது என்பதைக் கிறிஸ்தவர்களும், யூதர்களுமாகிய நாம் ஏற்கின்றோம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
Source: New feed