இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 23.04.2019 செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர், வடமாகாண ஆளுனரின் செயலர், குருக்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Source: New feed