புனிதர்களிடமோ, அன்னைமரியாளிடமோ எங்களுக்காக மன்றாடும் என கேட்கும்போது, இவ்வளவு ஏன் எங்கள் நண்பரிடம் அல்லது குடும்பத்தினர், அல்லது குருக்களிடம் எங்களுக்காக மன்றாடும் என கேட்கும்போது, அதன் பொருள் அவர்களை நாங்கள் ஆராதிக்கிறோம் என்பதல்ல..
அதற்கு பெயர் பரிந்து பேசுதல்/ ஒருவர் மற்றவருக்காக மன்றாடுதல் (we are simply asking for their intercession).
*****ஒருவர் மற்றவருக்காக மன்றாடுவதை ஆராதனை என்பீர்களானால் பவுல் அந்த பாவத்தை செய்தவராகிவிடுவார் உங்களால்..
தனக்காக மன்றாட கேட்கும் போது அவர்களை ஆராதிப்பவராகிவிடுவார் உங்கள் கருத்துப்படி..
காண்க..
(நான் பேசும்போது நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளைக் கடவுள் எனக்குத் தந்தருளுமாறு எனக்காகவும் #மன்றாடுங்கள்.
எபேசியர் 6:19)
*****
கடவுளும் உங்கள் பிழையான கருத்தால் மற்றவரை ஆராதிக்க ஒத்துழைப்பவராகிவிடுவார்..
காண்க..
(கடவுள் சொன்னது… என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது, நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன்.
யோபு 42:8
ஒருவர் மற்றவருக்காக மன்றாடுவது ஆராதனை அல்ல…
கத்தோலிக்க திருச்சபையில் #ஆராதனை எது என்றால், அது திருப்பலி மட்டுமே..
திருப்பலியில் கடவுளுக்கான ஆராதனையை, அவர் மைந்தன் நம் ஆண்டவர் இயேசுவின் தியாகப்பலியை ஒப்புக்கொடுப்பதன் மூலமாக செலுத்துகின்றோம்..
#திருப்பலி மட்டுமே #கடவுளுக்கான ஆவிக்குரிய #ஆராதனை…
ஆதி திருச்சபை இதையே செய்தது…
மேடைபோட்டு இசை நிகழ்ச்சி செய்யவில்லை..
உண்மையான ஆராதனைக்கு எப்போதும் அவசியமானது ” தியாகம்”
ஆராதனை என்றால் என்ன என்று அறிந்து வாதிட வாருங்கள்…
நீங்கள் உங்கள் சபைகள் கடவுளுக்கு கொடுக்கும் ஆராதனை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதை முடிந்தால் இங்கே சொல்லுங்கள்…
Source: New feed